திருநெல்வேலி மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் SP.P.சரவணன்IPS மருத்துவர்களுக்கு வேண்டுகோள்.


திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  14-05-22 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், IPS அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சுகாதார சேவை இணை இயக்குனர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள் தலைமையில், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் மாவட்டத்தில் நிகழும் சாலை விபத்துகளில் காயம் அடைபவர்கள், அடிதடி வழக்குகளில்  காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும்,   புலன்விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான  காயச்சான்று மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  முக்கியமானதாக இருப்பதால் காயச்சான்று மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  உடனடியாக வழங்கும் பட்சத்தில்  வழக்குகளை  விரைந்து முடித்து வைக்கமுடியும் என்று தெரிவித்தார்.  காயச்சான்றுகளை காவல் துறையினருக்கு விரைந்து வழங்கும்படி‌ மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.