புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை முதன் முறையாக குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்த காவல் ஆய்வாளருக்கு SP. பாராட்டு.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அறிவித்திருந்தார்.
இதன்படி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்தனர். இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் 88 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த நபரை கங்கை கொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்கள் கைது செய்து, மேற்படி நபரை முதல்முறையாக புகையிலை(Cotpa) விற்பனை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்.பெருமாள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன்,IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்
Comments
Post a Comment