புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை முதன் முறையாக குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்த காவல் ஆய்வாளருக்கு SP. பாராட்டு.


 திருநெல்வேலி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனை செய்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அறிவித்திருந்தார்.

இதன்படி மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்தனர். இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் 88 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த நபரை கங்கை கொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்கள் கைது செய்து,  மேற்படி நபரை முதல்முறையாக புகையிலை(Cotpa) விற்பனை வழக்கில் குண்டர் சட்டத்தின்‌ கீழ்  சிறையில் அடைத்தார்.மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்.பெருமாள் அவர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன்,IPS  அவர்கள்  நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.