கோவை மாவட்டம் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது...90 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல். காவல்துறையினரின் அதிரடி.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களை விற்பனை செய்யும் நபர்களை முற்றிலும் தடுக்கும் விதமாக, மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. ஞானசேகரன், உதவி ஆய்வாளர் திரு. திலக் மற்றும் 2 காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மார்க்கெட் பகுதியில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த கோவையைச் சேர்ந்த உமா என்பவரது மகன் பாரத் குமார் (30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் அதே பகுதியில் மளிகை கடையில் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த அட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவரது மகன் செல்வின் கானாபாலன் (66), பெரியசாமி என்பவரது மகன் கல்யாண சுந்தரம் (61) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தும் மொத்தம் சுமார் மூன்று நபர்களிடமிருந்து சுமார் 90 கிலோகிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.இது போன்ற சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.என்று கோவைமாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிருபர் P.நடராஜ்.
Comments
Post a Comment