திருநெல்வேலிமாவட்டம் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள 75 சென்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்SP.P.சரவணன்IPS பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி, வடக்கு வள்ளியாவிளை பகுதியை சேர்ந்த சுயம்பு (78) என்பவருக்கு சொந்தமான 75 சென்ட் இடம்
திருநெல்வேலிமாவட்டம்ராதாபுரம், வேப்பிலாங்குளம் பகுதியில் உள்ளது. இவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. 10.03.2022 அன்று சுயம்பு நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன், IPS அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் திருமதி. மகேஸ்வரி, திரு. முருகன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சுயம்பு என்பவருக்கு சொந்தமான 8 இலட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன் IPS அவர்கள் நில உரிமையாளர்களிடம் 06.05.2022 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P.சரவணன், IPS, அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments
Post a Comment