செம்பியம் பகுதியில் துணிக்கடையில் நுழைந்து கத்தியைக் காட்டி வழிப்பறி செய்து தப்பிய 4 நபர்களை கைது செய்த, செம்பியம் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்சங்கர்ஜிவால் IPS நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.


Commissioner of Police appreciated and rewarded Sembium Police Team for arresting 4 persons involved in robbery at knife point.  

 சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாவித் (வ/37) என்பவர், பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 30.04.2022 அன்று மாலை ஜாவித் கடையிலிருந்தபோது, கடையில் துணிகள் எடுப்பது போல வந்த 3 நபர்கள் திடீரென கத்தியை காட்டி ஜாவித்தை மிரட்டி துணிகள் மற்றும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். ஜாவித் பணம் தர மறுத்தபோது, 3 நபர்களில் ஒருவர் கத்தியால் ஜாவித்தின் கையில் தாக்கியபோது, ஜாவித் சத்தம் போடவே, 3 நபர்களும் கடையிலிருந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஜாவித் மேற்படி சம்பவம் குறித்து,  செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க செம்பியம் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.செம்பேடு பாபு,  செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜி.ஐயப்பன் தலைமையில், தலைமைக் காவலர் முருகன் (த.கா.20594), முதல்நிலைக் காவலர்கள் அஸ்கர் அலி (மு.நி.கா.57119), சிவகுமார் (மு.நி.கா.45006), முத்துகிருஷ்ணன் (மு.நி.கா.30693) மற்றும் காவலர் ராஜேஷ் (கா.48481) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

 தனிப்படையினர் மேற்படி கடையிலிருந்த சிசிடிவி கேமரா மற்றும் கடைக்கு வெளிப்புறங்களில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 1) கலை (எ) கலைச்செல்வம் (வ/26) செங்கல்பட்டு மாவட்டம், 2) செல்வகுமார் (எ) பாம்பு (எ) ஜெயராம் (வ/26) பொன்னியம்மன்மேடு, சென்னை, 3) தினகரன் (வ/20) புளியந்தோப்பு 4) அஜய் (எ) ஜோதிகுமார் (வ/29) அயனாவரம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடையிலிருந்து திருடிய ரூ.1,000/- மதிப்புள்ள துணிகள், 4 செல்போன்கள், 2 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 விசாரணையில் எதிரி கலை (எ) கலையரசன், மேற்படி கடையின் வெளியே நின்று நோட்டமிட்டுக் கொண்டு மற்ற 3 எதிரிகளையும் கடைக்குள் அனுப்பி மேற்படி கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றதும், பின்னர் மாதவரம் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு துணிக்கடையிலும் இதே போல நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி துணிகளை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. 

 மேலும் விசாரணையில் மேற்படி எதிரிகள், தொப்பை கணேஷ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டமிட்டு, மேற்படி எதிரிகளில் செல்வகுமார் (எ) பாம்பு என்பவர் வீட்டில் 2 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருப்பது தெரிவந்ததின்பேரில், மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாதவரம் காவல் குழுவினர் செல்வகுமார் (எ) பாம்பு என்பவரது வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

செம்பியம் பகுதியில் துணிக்கடையில் நுழைந்து கத்தியைக் காட்டி வழிப்பறி செய்து தப்பிய 4 நபர்களை கைது செய்த, செம்பியம் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், IPS அவர்கள்  (14.05.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 

சிறப்புநிருபர்.GD.கமல்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.