சென்னையில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தபட இருந்த பச்சைகல், லோகத்தினால் ஆன நாகாபரணலிங்கசிலை மீட்பு சிலைகடத்தல்தடுப்புபிரிவு காவல்குழுவினர் அதிரடி



சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன்கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளதுஎன்ற இரகசிய தகவலை அடுத்து சிலை திருட்டுகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் DGP.          Dr.ஜெயந்த் முரளி, IPS அவர்களின் உத்தரவுப்படி, சிலை திருட்டுகடத்தல் தடுப்பு பிரிவுகாவல்துறை தலைவர் IG திரு.தினகரன், IPS அவர்களின் வழிகாட்டுதலின்படி,                        


 சிலை திருட்டுகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கதிரவன் காவல் உதவி ஆய்வாளர்கள்திரு.ராஜசேகரன்,திரு. செல்வராஜ் மற்றும் காவலர்கள் திரு.பிரபாகரன், திரு.பாண்டிய ராஜ்,திரு.சுந்தர் ஆகியோர்கள் அடங்கிய சிலை திருட்டு கடத்தல்தடுப்பு பிரிவு போலிசார்சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலைகடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இச்சிலைக்கு விலை ருபாய் 25கோடி சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலை கடத்தல் காரர்களைநம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன் 1.சென்னை வெள்ளவேடு,புதுகாலணியை சேர்ந்த எத்திராஜ் மகன் பக்தவச்சலம் (எ) பாலா, வயது 46, 2.சென்னை, புதுசத்திரம், கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்பாக்கியராஜ் வயது 42 இவர்களிடமிருந்து சிலையை கைப்பற்றி காவல் உதவி

ஆய்வாளர் திரு.ராஜசேகர் தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலைதிருட்டு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக சிலை திருட்டுதடுப்பு கடத்தல்பிரிவு குற்ற எண்.13/2022 என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின்புலன்விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் மேற்கண்ட நபர்களைவிசாரணையின் தொடர்ச்சியாக கைது செய்து  நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்தஉள்ளார் மேற்படி சிலையானது பச்சைகல்லிங்கத்தினை உலோகத்தால் ஆகியநாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வருடன் சுமார் 29செ.மீ உயரம் 18 செ.மீ அகலம் பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ எடைசுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் பச்சைகல்லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீஅதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது. மேற்படி மேல்நடவடிக்கைகாக சிலையைமீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார்கள். மேற்படி சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள்ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லபடுகிறது. மேலும் படம் எடுத்தநாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சங்கள் யாவும் நேபாள பாணியில் ஆனது என்று சொல்லப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

 முதன் மைஆசிரியர்.S.முருகானந்தம் மற்றும் சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.