காவவல்நிலையயங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களை மரியாதையுடன் நடத்த தனி வரவேற்பு பிரிவு- ஆவடி மாநகரகாவல்ஆணெயர் சந்தீப்ராய்ரத்தோர் IPSதொடங்கி வைத்தார்!


ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த காவல் நிலையத்தில் தனியாக வரவேற்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆவடி காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் IPSதிறந்து வைத்தார்.

இந்த வரவேற்பு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இந்த அறையில் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அமர இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆவடி போலீஸ் கமி‌ஷனர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் IPS கூறும்போது, காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வரவேற்பு பிரிவு மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காவல் நிலையத்தில் கூட்டம் சேர்வது தடுக்கப்படும்’ என்றார்.

இந்த வரவேற்பு பிரிவு ஆவடி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தின் கீழ் வரும் 25 காவல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஆயுதப்படை போலீசார் விடுப்பு எடுக்க விண்ணப்பிப்பதற்கான செயலியையும் போலீஸ் கமி‌ஷனர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் IPS அறிமுகப்படுத்தினார்.

துணைஆசிரியர்.S.முருகானந்தம்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.