டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கங்கள் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவ, மாணவியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.

 

கடந்த 26.03.2022லிருந்து 28.03.2022 அன்று வரை 3 நாட்கள் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர். இந்த சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி முத்து சிலம்பு கூடம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் கல்லூரி மாணவர் தினேஷ் குமார் என்பவர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் வெற்றி பெற்று தங்கபதக்கமும், ஹோலி கிராஸ் பள்ளி மாணவி வெரோனிகா பாத்திமா என்பவர் 14 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தங்கபதக்கமும் சான்றிதழும் பெற்றுள்ளனர்.

மேற்படி தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கங்கள் வென்ற இருவரும் .(11.04.2022) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ட Dr.எல்.பாலாஜி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவர்களை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி முத்து சிலம்பு கூட பயிற்சியாளர் முனியசாமி உடனிருந்தனர்

.நிருபர்கள்.N.ராமசாமி,அய்யப்பன்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

கொடைக்கானலில் சோலார் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மான் விவகாரம், வித்தியாசமானநிபந்தனையுடன் ஜாமின்வழங்கிய நீதிபதி

திருநெல்வேலி‌ மாவட்ட காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்.SP.சரவணன்IPS.தலைமை.