கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திகணேசன் IPS அவர்கள் பெண்களின் நலன் காக்க Ladies First 82200 06082 , முதியோர்களின் நலன் காக்க Hello Senior 82200 09557 என்றஎண்களைஅறிவித்

புதிய காவல் உதவி எண்கள் மூலம் புகார்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த கன்னிகா பரமேஸ்வரி வயது 43 என்பவர் ladies first காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு , மனுதாரருக்கு குழந்தை இல்லை என்கிற காரணத்தினால் மனுதாரரின் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமை செய்வதாக புகார் தெரிவித்ததன்பேரில் , உடனடியாக நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மனுதாரரின் மாமியார் மற்றும் நாத்தனாரை கடுமையாக கண்டித்து பின்பு தக்க அறிவுரை வழங்கியதின்பேரில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது . புதுச்சத்திரம் காவல் சரகம் வில்லியனூர் கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி வயது 70 என்பவர் தனது பேரன்களான பிரபு , ரமேஷ் , முருகன் ஆகியோர் தனக்கு சாப்பாடு போட மறுப்பதாகவும் , தன்னிடம் பிரச்சனை செய்வதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் கொடுத்த புகார் மனு தொடர்பாக Hello Senior காவல் உதவி எண் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர். பாலாஜி அவர்கள் விசாரணை மேற்கொண்டு மூதாட்டி ராஜலட்சுமியின் பேரன்களான பிரபு . ரமேஷ் , முருகன் ஆகிய மூவரும் மாதாமாதம் தலா ரூபாய் 1000 வீதம் ரூபாய் 3000 தங்களது பாட்டிக்கு கொடுப்பதாகவும் , அவருக்கு உணவளித்து நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறி காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளனர் . மனுதாரரும் இதனை ஏற்றுக் கொண்டதால் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டு பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது . கருவேப்பிலங்குறிச்சி ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த பூங்கோதை வயது 62 என்பவர் Hello Scnior காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு எதிர்மனுதாரர்களான கலையரசன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் அசிங்கமாக திட்டி அடித்துவிட்டதாகவும் , அடிக்கடி பிரச்சனை செய்வதாகவும் புகார் தெரிவித்ததன்பேரில் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி . சமேதா அவர்கள் விசாரணை மேற்கொண்டு எதிர்மனுதாரர்களான கலையரசன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது , நெல்லிக்குப்பம் குடிதாங்கிசாவடியை சேர்ந்த சாராள் வயது 60 என்பவர் Hello Senior காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தனது மகன் எட்வின்ராஜ் தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டதாகவும் , தான் இப்போது வாடகை வீட்டில் வசிப்பதாகவும் தனது சொந்த வீட்டில் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் புகார் தெரிவித்ததன்பேரில் நெல்லிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ( பயிற்சி ) திரு.சந்திரவேல் அவர்கள் CSR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மனுதாரரின் மகன் எட்வின்ராஜ் மூன்று மாத காலத்திற்குள் வீட்டை சரி செய்து வீட்டை இரண்டு பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதியில் தனது அம்மாவை தங்க வைத்து பார்த்துக்கொள்வதாக கூறி காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துள்ளார் . மனுதாரரும் இதனை ஏற்றுக் கொண்டதால் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கப்பட்டு பிரச்சனை சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது .இதுபோன்று கடலூர்மாவட்டத்தில் பொதுமக்கள்புகார் உதவிஎண்கள்மூலம் அளிக்கும்புகார்கள்மீது சம்மந்தபட்ட காவல்நிலைய அதிகாரிகள் உடனுக்குடன் மக்கள்பிரச்சினைகளுக்கு தீர்காணும்படி நடவடிக்கை மேற்க்கொண்டுவருகிறார் கடலூர்மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ் IPS அவர்கள் என்பது குறிப்பிடதக்கது


.சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.