தமிழ்நாடுகாவல்துறையில் புதிதாக தேர்வான இரண்டாம்நிலை காவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறைக்கு புதியதாக தேர்வான இரண்டாம் நிலை காவலர் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2020-ஆம் ஆண்டுக்கான காவல் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணி நியமன ஆணையிணை வழங்கினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரில் 20 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 21 நபர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணி நியமன ஆணையை திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள்  நேற்று (08.03.22)-ம்தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

மேற்படி தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 14.03.2022-ஆம் தேதி முதல் 7 மாத காலம் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சியும், ஒரு மாத காலம் மாவட்ட / மாநகரகத்தில் நடைமுறை பயிற்சியும், ஆக மொத்தம் 8 மாத காலங்கள் காவல் பயிற்சி பெற்ற பின்னர் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட / மாநகர ஆயுதப்படைகளில் தேவைக்கேற்ப பணி நியமனம் செய்யப்படுவர்கள்.

மேலும், தமிழ்நாடு காவல்துறைக்கு புதியதாக பணி நியமனம் பெற்ற நபர்களை வாழ்த்தியும், பயிற்சி காலங்களில் நன்றாக பயிற்சி பெற்றும், அதன்பின்னர் தங்களது காவல் பணிகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு நற்பெயர் நல்கிட வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் மேலான அறிவுரையை வழங்கினார்கள்.

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.