போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்P.சரவணன் IPS அவர்கள், பொதுமக்களுக்கு புகையிலைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும்  தீமைகள் குறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு  அறிவுறுத்தியிருந்தார். இதன்படி 28.03.2022  கங்கைகொண்டான், திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலை கொழுந்துபுரம் மற்றும் தாழையூத்து ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும்  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது   தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா,கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால்  காவல்துறைக்கு உடனே  தெரிவிக்கும் படியும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


தலைமைநிருபர்.S.சண்முகநாதன்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.