தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு

 


வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் புதுக்கோட்டை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.*
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு இன்று (10.03.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூகாம்பிகை மெடிக்கல் முன்பு தொடங்கி சத்திரம் பஸ் ஸ்டாப், பத்திரகாளியம்மன் கோவில் பகுதி, புதுக்கோட்டை பஞ்சாயத்து அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், சிவந்தி நற்பணிமன்றம், பஜார், TMB வங்கி, RC சர்ச், யூனியன் அலுவலகம் வழியாக புதுக்கோட்டை காவல் நிலையம் வந்து கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.*
இந்த கொடி அணிவகுப்பில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பொன்னரசு, எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி திரு. ஏ.கே. லேம்கான், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. இம்மானுவேல் ஜெயசேகரன் உட்பட அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்.*

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.