சூளகிரி அருகே தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனையில் ரூபாய் 4,29,000 பறிமுதல்

 

தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனையில் ரூபாய் 4,29,000 பறிமுதல் 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபரப்பள்ளி சந்திப்பு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஏணுசோனை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவரின் காரில் அதிகாரிகள் சோதனையிட்டதில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தினேஷ் நிலம் வாங்குவதற்காக பணம் கொண்டுவந்ததாக கூறினார். அப்போது அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்..


செய்தியாளர் 

A. முஹம்மத் யூனுஸ்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.