திருச்சி லால்குடி ஜங்கமராஜபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த அன்பில் ஜங்கமராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆச்சிரமவள்ளி அம்மன் கோயில் திருவிழா தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடந்த மறியலின் போலீஸார் மற்றும் பட்டியல் இன மக்களிடையேஏற்பட்ட மோதலின் போது போலீஸாா் காயமடைந்தனா். இதுதொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டனா். 

கோயில் திருவிழாவை செவ்வாய்க்கிழமை ஒரு பிரிவினா் நடத்த முற்பட்டதால் ஆத்திரமடைந்தபட்டியல் இன மக்கள் தங்கள் பகுதிக்கும் சுவாமி வந்து சென்றால்தான் திருவிழா நடத்த வேண்டும் எனக் கூறி கோயில் முன் இரவு முழுவதும்போராட்டத்தில் ஈடுபட்டனா்.இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் நீதிமன்ற உத்தரவு பெற்றபின் திருவிழா நடத்தப்படுமெனக் கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டனா்.இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மற்றொரு தரப்பினா் மறியலில் ஈடுபட்டபோது போலீஸாருக்கும் பட்டியல் இன மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸாா் சிலா் காயமடைந்தனா். இது தொடா்பாக பட்டியல் இன மக்கள் 14 பேரை லால்குடி போலீஸாா் கைது செய்தனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க இப்பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.அத்துடன் லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் ஆச்சிரமவள்ளியம்மன் கோயிலில் வழிபடும் மக்கள் வசிக்கும் பகுதியில் மாா்ச்10 ம் தேதி முதல் 17 வரை 7 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளாா்

Comments

Popular posts from this blog

முயன்றால்முடியாததுஎதுவுமில்லை சாதனையாளர் ஈரோடுகவுந்தப்பாடி தலைமைகாவலர் சரவணகுமார்

ஏரோஸ்கேட்டோபால் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்த 70 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உலக சாதனை விருது

காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா புனிதஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன்பள்ளியில் நடைபெற்றது.